×

வைரசை கட்டுப்படுத்த சிறந்தது சித்த மருந்துகள்: டாக்டர் சாய் சதீஷ், சித்த மருத்துவர்

சித்த மருத்துவம், மிகவும் எளிமையான மருத்துவ முறை என்று எண்ணிவிடக் கூடாது. இது பல்வேறு யோக, ஞான, வைத்திய விடயங்களைத் தன்னகத்தே கொண்டது; சித்தர்கள் தங்களது யோக சித்தியால், தவ வலிமையால் பல்வேறு மூலிகைகளின் குணங்களை உணர்ந்து, மக்களைப் பாதிக்கும் நோய்களை விரட்டி, நூறாண்டு வாழ்வதற்கு ஏற்ப பல்வேறு மருந்துகளைக் கண்டறிந்தனர். சித்தர்கள், மருந்துகள் கண்டறியும் விதமே மிகவும் அலாதியானது. சித்தர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’  ‘பிண்டத்தில் உள்ளதே அண்டம்’. அதாவது, இந்த உலகத்தில் எல்லாம் இருக்கின்றன என்பதே இதன் பொருள். ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, பின்வரும் குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது.

ஆற்றல்மிக்க சித்த மருத்துவர்கள் போற்றி வளர்த்த சித்தமருத்துவம், மக்களிடையே மிகப் பிரபலமாக இருந்த சித்தமருத்துவம், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு நவீன அலோபதி மருத்துவத்தின் ஆளுமையால், மெல்ல தனது முக்கியத்துவத்தை இழந்தது. சமீபத்திய ஆய்வுகள் நவீன மருத்துவத்தின் குறைபாடுகளை, பக்கவிளைவுகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், ஒவ்வொரு மனிதனும் தன் அளவில் யோசித்து மீண்டும் இயற்கை மற்றும் பாரம்பரிய விசயங்களைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டனர். மக்களே சித்த மருந்துவத்துக்கு திரும்ப ஆரம்பித்து விட்டனர்.

மேலும் சித்த மருத்துவத்தில் மருந்து உண்ணும் அளவுகள், மருந்தையும் நோயையும் பொறுத்து மாறுபடும் இயல்புடையவை. பெரும்பாலும் மருந்தின் அளவுகள், மிளகு அளவு, பட்டாணி அளவு, சுண்டைக்காய் அளவு, நெல்லிக்காய் அளவு  என்ற வீதத்தில் இருக்கும். மருந்துகளை, சொல்லப்பட்ட அளவுக்கு, குறைந்தபட்சம் மூன்று நாள்களில் இருந்து 21 நாட்கள்வரை சாப்பிட்டு வந்தால் மட்டுமே, உறுதியான, நிச்சயமான பலனைப் பெற இயலும். பெரும்பாலும், மருந்துத்தூள் அல்லது பொடியை, 2 முதல் 5 கிராம் வரை, அதாவது அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை சாப்பிடுவதைக் குறிப்பதாகும்.

இந்த வகை மருந்துகளை, குறைந்தபட்சம் மூன்று வேளை முதல் 21 நாள்கள் வரை, தேவைப்பட்டால் 48 நாட்கள் (ஒரு மண்டலம்), 96 நாட்கள் (இரண்டு மண்டலம்) அல்லது தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் ஒன்று, இரண்டு முறை மருந்துகளைப் பயன்படுத்தி விட்டு, மருந்துகள் சரியில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். கபசுரகுடிநீர், நொச்சி குடிநீர், ஆடா தொடை குடிநீர் போன்றவை சிறந்த வைரஸ் எதிர்ப்பு ஆற்றலாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த கூட்டு மருந்துகள் சிகிச்சையில் மட்டுமே மனித உடலில் உள்ள வைரசை நீக்குவதற்கும், வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் சிறப்பதாக உள்ளது என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேண்டுமானால் சிறு அறிகுறிகள் ஏற்பட்டவுடன் சித்த மருத்துவத்தை ஆரம்பத்திலே எடுத்துக் கொண்டால் நூறு சதவீதம் ெகாரோனா வைரசை கட்டுப்படுத்துவதுடன் முற்றிலும் உயிரிழப்பே இல்லாத நிலை உருவாக்கலாம். மேலும் காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறிகள் ஏற்பட்டவுடன் ஆரம்பத்திலே கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை குடிநீர், மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அதில் இருந்து முற்றிலும் விடுபடலாம். கொரோனா வைரஸ் ஆரம்பித்து முதல் 5 நாட்களுக்குள் பிறகு தான் தீவிரமாக பரவி வருகிறது. அதற்குள் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் நோய் பரவும் தன்மை, வைரஸ் பரவுதல் போன்றவை கட்டுக்குள் வந்து விடுகிறது.
 
 சித்த மருத்துவத்தை அயல் நாட்டு மருத்துவம் என்று பார்க்காமல் நம் வீட்டு மருத்துவம் என்று நினைத்து பயன்படுத்த வேண்டும். எனவே சித்தர்கள் வழி வகுத்த நெறிமுறைகள், நோய் நீக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். ஆரம்பத்திலே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும். நோய் பாதிப்பு அதிகமாயிருப்பின் அலோபதி மருந்துடன் சித்த மருந்தையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் எந்த விதமான பாதிப்பும் வராது.

* சித்த மருத்துவத்தை அலட்சியம் செய்யக்கூடாது: சுரேஷ் கண்ணா, சிகிச்சை பெற்றவர்
நான் மணலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மணலி மாநகராட்சியில் கொரோனாவுக்காக பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி கூறினர். அதன்படி ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. அதனால் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் கொரோனாவிற்கு சித்த மருத்துவ முறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அங்கு சென்றேன். மேலும் என்னுடன் முதல் கட்டமாக 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்கைக்காக வந்தனர். அதன்பிறகு மறுநாள் 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்தனர். அதில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு என்னை விட பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், டாக்டர்கள் நம்பிக்கையூட்டி தீவிரமாக எங்களுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிசசை முறைப்படி, தினமும் காலை 6 மணிக்கு எழுந்தவுடன் உப்பு வெந்நீரில் தொண்டையை சுத்தம் செய்த பிறகு மூலிகை தேநீர், 7 மணி வரை சூரிய ஒளி நடை, அதன் பின்னர், சித்தர் யோக முறைகள், திருமூலர் பிராணாயாமம் செய்ய வைத்தனர். மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் அதிகம் பேர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு தைரியம் வழங்கும் வகையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

எல்லாம் முடிந்தபின், தினம் காலை 8 மணியளவில் கபசுரக்குடிநீர் 8.30 மணிக்கு மூலிகை சிற்றுண்டி, அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு, சாதம், சாம்பார், என உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்துகளை வழங்கினர். பின்னர் மாலையில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று அதிகமானவர்களுக்கு கூடுதலாக மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பாசிட்டிவ் பாதிப்பு அதிகம் உள்ள நபர்களுக்கும் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மூன்று முதல் 7 நாட்களுக்குள் எல்லாரும் குணமடைந்தனர்.

அதைப்போன்று என்னுடன் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபருக்கு மூச்சுதிணறல், இருமல், காய்ச்சல் அதிகமாக இருந்தது அவர்களுக்கு கபசுரக்குடிநீர், ஆடாதொடை கசாயம், நிலவேம்பு கசாயம் போன்ற மருந்துகளை சாப்பிட்டவுடன் 2 நாட்களில் மூச்சுதிணறல் சரியானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, சாலிகிராமம் ஜவஹர் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் தான் சித்தாவிற்கு என்று சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு முகாம்களிலே 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தமிழக அரசு சித்த மருத்துவத்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று அலட்சியம் செய்வது போல் உள்ளது. அப்படி செய்யாமல்,  முன்கூட்டியே கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை கசாயம் போன்ற மருந்துளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய நேரத்தில் சித்த மருந்துகளின் உதவியுடன் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்கப்பட்டது போன்று அனைத்து பகுதி மக்களுக்கும் முன்கூட்டியே வழங்கினால் கொரோனா வைரசில் இருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம். டெங்கு போல, கொரோனாவிற்காக அரசு எந்தவிதமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஆனால் 6 கட்டங்களாக ஊரடங்கை மட்டும் அமுல்படுத்தி வருகின்றனர்.


Tags : Sai Satish ,Doctor ,Siddha , To control the virus, Siddha medicines, Dr Sai Satish, Siddha doctor
× RELATED பூசணி விதையின் பயன்கள்!