டெல்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்ததோர் எண்ணிக்கை 19,235 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சோதனையில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் உள்ள மொத்த எண்ணிக்கை 1,194-ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான வித்தியாசம் 2,42,362-ஆக உள்ளது எனவும் கூறியுள்ளது.