×

மனைவி நடத்தையில் சந்தேகம் மனைவி சுத்தியால் அடித்து கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவைச் சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). சென்னை முகப்பேரைச் சேர்ந்த இவர் எண்ணெய்க்காரத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  இவர் மனைவி சரஸ்வதி (37).  இவர்களுக்கு பரந்தாமன் (20). கிருஷ்ணபிரசாத் (17), திருமலை (15) என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.  ஆக்டிங் டிரைவராக வேலை செய்யும் தேவிபிரசாத் கடந்த 4 மாதங்களாக இவர் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவித்து வந்துள்ளார். இவரின் மனைவி  அக்கம்பக்கம் வீடுகளில் வீட்டுவேலை செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டாம் மாடி மேல் தளத்தில் கணவன், மனைவி இருவரும் உறங்கச் சென்றுள்ளனர், மகன்கள் கீழ்தளத்தில் தூங்கிகொண்டு இருந்துள்ளனர். காலையில்  மகன்கள் எழுந்து  தந்தை தூக்கிட்டு இறந்தைப் பார்த்து அலறினர். உடனே மேலே சென்று பார்த்தபோது  தாயும்  இறந்ததை பார்த்தனர்.  

உடனே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.  போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப்  பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மனைவி வீட்டு வேலைக்கு செல்வதால் அவர் நடத்தையில் தேவிபிரசாத் சந்தேகம்  அடைந்துள்ளார். இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவித்த தேவிபிரசாத்துக்கும் மனைவிக்கும்  இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த தேவிபிரசாத் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார், இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி தேவிபிரசாத் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீழ்தளத்துக்கு வந்த தேவிபிரசாத் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : suicide ,death ,hammer killing , Wife, Suspicion, Wife, Murder, Husband, Throwing Suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை