சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் சோதனையில் முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 17 பேர் குணமடைந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.