×

மக்களுக்கு உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் தர நிதி இல்லை என கூறுவது மாபாதக செயல்; மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மக்களுக்கு உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் தர நிதி இல்லை என்று கூறுவது மாபாதக செயல் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வீண் விளம்பரங்களுக்கும், கமிஷனுக்காக டெண்டர்களுக்கும் உங்களால் நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கிய ஓய்வூதியத்தை நிதி இல்லை என்று ரத்து செய்வீர்கள். மருத்துவர்களின் சேவையை பார்த்தபடியே அவர்களுக்கு மாபாதகத்தை செய்ய எப்படி முடிகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : doctors ,MK Stalin , People, doctors, pensions, finance, MK Stalin's condemnation
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை