×

சசிகலா கட்டுப்பாட்டில் கட்சி செல்வதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

சென்னை : சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் தங்களது முடிவு என்று மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார். தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் இணையக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்று கூறியுள்ளார்.

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி செல்வதை அதிமுகவினர் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் சசிகலா குறித்து பேசியது ஒ.எஸ்.மணியன் அவர்களின் சொந்த கருத்ததாக இருக்கலாம். ஆனால் சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை. அதிமுக-வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை“ என்றுள்ளார்.முன்னதாக நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவை யார் வழிநடத்துவது என தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறி இருந்தார். சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என கூறப்பட்டு வரும் நிலையில், வரை கட்சிக்குள் அனுமதிப்பதா வேணாமா என்பது குறித்து அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.  


Tags : Sasikala ,AIADMK ,Jayakumar AIADMK ,Minister ,party , AIADMK, rule, Sasikala, Minister Jayakumar, plan
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...