×

அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம் பெற வேண்டும்! நோய் பரவல் அதிகரிப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செல்லூர் ராஜூவின் உடல் நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணியை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3வது அமைச்சர் இவர் ஆவார். மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்!!


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்றார்.

Tags : Selur Raju ,spread ,MK Stalin , DMK, President, Stalin, Tweet, Minister, Selur Raju, Corona
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...