சென்னை: சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாச்சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக ஈவிஆர் சாலை வருபவர்கள் இதே சாலையில் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.