×

ஜேசிபி எந்திரம் மூலம் குழியில் கொட்டப்படும் உடல்கள்...! நெல்லூர் அருகே கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

நெல்லூர்: நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கடகிரியை சேர்ந்த நபர் ஒருவர் உட்பட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இன்று அதிகாலை அவர்களுடைய உடல்களை பென்னா நதிக்கரைக்கு கொண்டு சென்ற நகராட்சி ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்து அங்கு தயாராக வரவழைக்கப்பட்ட ஜேசிபி எந்திரத்தில் மண் எடுக்க பயன்படும் பகுதிக்குள் தூக்கி  வீசினர். தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தை ஓட்டி சென்ற டிரைவர் அங்க வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் ஜேசிபியில்  இருந்து அந்த உடல்களை போட்டார்.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட மரணத்திற்கு பின் அந்த உடலகளுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. ஆனால் இதுபற்றி விளக்கம் அளிக்கும் நெல்லூர் நகராட்சி அதிகாரிகள், அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லாது என்பதால் தான் அதுபோல் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

Tags : Bodies ,pit ,corona ,Nellore ,dead ,JCB Machine , JCB, Bodies, Nellore, Corona, pathetic condition
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு