×

சடலங்களுடன் ஒரே அறையில் கொரோனா நோயாளிகள்!: 2 நாட்களாகியும் அப்புறப்படுத்தாததால் சர்ச்சை.. பாட்னா அரசு மருத்துவமனையில் அவலம்

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாமல் 2 நாட்களாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதில் 10க்கும் மேற்பட்ட படுக்கை கொண்ட அறையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உள்ளனர். 2 நாட்களாகியும் சடலங்களை மருத்துவ நிர்வாகம் அப்புறப்படுத்தாமல் இருந்துள்ளது. இதனால் அதே அறையில் இருக்கும் மற்ற கொரோனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக உடல்களை அப்புறப்படுத்தியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் உடல்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை பிணவறையில் ஏன் வைக்கப்படவில்லை என பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Tags : Corona ,room ,hospital ,victims ,Patna ,Covid-19 , Covid-19 victims’ bodies lie unattended at Patna hospital,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...