கோவை : கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் உள்ளனரா என்று வீடியோ கால் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்தவர்ளை வாட்ஸ் ஆப் வீடியோவில் அழைத்து தனிமை நிலையை உறுதி செய்கின்றனர். மேலும் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க ஆலோசனைகளையும் கோவை மாநகராட்சி வழங்கி வருகிறது.