ஈரோடு: ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த 38 வயதான அருண்குமார் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அருண்குமார் உடலை அடக்கம் செய்ய வெண்டிபாளையம் கல்லறைத் தோட்டத்திற்கு வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.