சென்னை: சொத்துவரி வசூலை 6 மாதங்களுக்காவது சென்னை மாநகராட்சி தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை என அவர் கூறியுள்ளார்.