சென்னை: மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும் என்று விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். சமூக நீதி, பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் நலனை என்றென்றும் அரசு காக்கும் என்று அவர் கூறியுள்ளார். சமூக, கல்வி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.