டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவின் மொத்த பாதிப்பு 7,67,296 ஆக உயர்ந்துள்ளது.