டெல்லி: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்த உள்ளனர். தந்தை, மகன் கொலை வழக்கு ஐ.நா. கவனத்துக்கு சென்றதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள் டெல்லி விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரை சிபிஐ காவலில் எடுத்த விசாரிக்க உள்ளனர்.