×

மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பொன்னம்பல வாத்தியார் தெருவில் பஜ்ஜி கடை நடத்தி வருபவர் சிவராமகிருஷ்ணன்(53). வீட்டிற்குள் இருந்து ஜன்னல் வழியாக பஜ்ஜி விற்பனை செய்வதால் இந்த கடை ஜன்னல் பஜ்ஜி கடை என்று பெயர் பெற்றது. மயிலாப்பூர் பகுதி மக்கள் தவிர, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பலர் இந்த கடைக்கு வந்து பஜ்ஜி வாங்கி செல்வார்கள். கடையை விரிவாக்கம் செய்யும் அளவிற்கு இடம் இருந்தாலும் அவர் ஜன்னல் அருகே சிறிய இடத்தில்தான் அமர்ந்து தொடர்ந்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சிவராமகிருஷ்ணனுக்கு கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். விதிகளின்படி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Tags : korona ,Mylapore ,window barge shop owner , Mylapore, window, barge shop owner, corona, kills
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...