×

பெண்ணிடம் நள்ளிரவில் விசாரணை இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு

மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவில் விசாரணை நடத்திய விவகாரத்தில் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து டிஐஜி உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிவண்ணன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு செல்போனில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். இதுபோன்று அடிக்கடி நள்ளிரவில் பேசியதால், அந்த பெண் அப்போதைய டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.

அவர் விசாரித்து உண்மை என தெரிந்ததால் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு உத்தரவை கடந்த மாதம் இறுதியில்  பிறப்பித்து டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதற்கிடையில் கடந்த 30ம் தேதி 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதில் டிஐஜி பாலகிருஷ்ணனும் மாற்றப்பட்டார். இதனால் இன்ஸ்பெக்டரிடம் அதற்கான நகல் வழங்கும் பணி தாமதப்பட்டது. நேற்றுமுன்தினம் உத்தரவு நகல் வழங்க வருவது அறிந்த இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வரவில்லை. நேற்று காலை வந்த போது அவரிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது. 


Tags : hearing inspector ,retirement woman , Woman, midnight hearing, inspector, retirement
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை