சென்னை : சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.