×

மனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள கொரோனா: அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேருக்கு சிகிச்சை ; 15 மண்டலங்களிலும் உக்ரம்!!

சென்னை :சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. * அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 1,243 பேரும், மணலியில் 551 பேரும்  மாதவரத்தில் 909 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,810 பேரும்,  ராயபுரத்தில் 1,999 பேரும், திருவிக நகரில் 1,898 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 1,314 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,383 பேரும், தேனாம்பேட்டையில் 2,447 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,990  பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 1,228 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 968 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,673 பேரும்  பெருங்குடியில்  890 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 587  பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : humanity ,zones , Corona, Kodambakkam, Therapy, Ukram, Chennai
× RELATED பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு