சென்னை :சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. * அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 1,243 பேரும், மணலியில் 551 பேரும் மாதவரத்தில் 909 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,810 பேரும், ராயபுரத்தில் 1,999 பேரும், திருவிக நகரில் 1,898 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* அம்பத்தூர் மண்டலத்தில் 1,314 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,383 பேரும், தேனாம்பேட்டையில் 2,447 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,990 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* வளசரவாக்கத்தில் 1,228 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 968 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,673 பேரும் பெருங்குடியில் 890 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 587 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.