×

ஊரடங்கிலும் குறையாத கொரோனா பாதிப்பு.! சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு.!! இன்று 29 பேர் பலி

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 38 வயது ஆண் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1083 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்தப்பாடு இல்லை.


Tags : deaths ,Chennai ,Corona , Corona damage,curfew,
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...