சென்னை : மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரூ. 1,000 நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முகவரி மாறி வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இல்லத்துக்கே சென்று நிதியுதவி அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நிதி உதவி வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும். ஊரடங்கால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தலா ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.