×

கொரோனாவுக்கு பிடிஓ பலி

கும்மிடிப்பூண்டி: சென்னை அண்ணாநகரை சேர்ந்த சாமிநாதன் (50) என்பவர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் கடந்த மாதம் 21ம் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிடிஓ சாமிநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : PDO ,Corona ,PDO Kills Corona , Corona, PDO, Kills
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...