×

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. அமைச்சர், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மேலும் டாக்டர்கள், அரசு உயர் அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள், எம்எல்ஏ ஒருவரும் இறந்துள்ளனர். இதுதவிர உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் 8 எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் பெண் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா தொற்று காரணமாக நேற்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, அதிமுகவின் கலை, இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவரது வீடு சென்னை, வளசரவாக்கத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, சென்னையில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வளர்மதி கலந்து கொண்டார். இதன்மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Pa ,Coronation Pa , Prime Minister, Ex-Minister P.Valarmathi, Corona, Private Hospital, Permission
× RELATED பா.ஜ.க.வில் வலுக்கும் உட்கட்சி மோதல்:...