×

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வந்து விடவேண்டும் என்ற அமெரிக்க முயற்சி தோல்வி: ஈரான் துணை அதிபர்

ஈரான்: ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை எப்படியாவது பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்ற அமெரிக்க முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக ஈரான் துணை அதிபர் இஷாக் ஜஹாங்கிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் வாழ்வாதாரமான எண்ணெயை அமெரிக்கா தனது கடுமையான தடைகள் மூலம் முடக்க திட்டமிட்டது. முந்தைய தடைகளினால் ஈரான் 10 லட்சம் பேரல்கள் வரையே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிலையில் 9 லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்தது. இப்போது அமெரிக்கா ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்கா இதில் கடுமையான தோல்வியை தழுவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் தனது பிரதான வருவாய் ஆதாரமான எண்ணெயிலிருந்து வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. மேலும் எண்ணெய் ஏற்றுமதிக்காக புதிய பாதைகளை ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரான் தற்போது கூரே எண்ணெய் முனையத்திலிருந்து ஜாஸ்க் துறைமுகத்துக்கு பைப்லைன் அமைத்து வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்களை பெர்சியா வளைகுடாவின் கிழக்குப் பகுதியிலிருந்து நேரடியாக ஓமான் வளைகுடாவுக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் அபாயகரமான ஹோர்முஸ் பகுதியை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பைப்லைன் திட்டம் 2021-ல் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : US ,Iranian ,vice chancellor , Iran, oil, US
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...