×

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவுக்கு பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

மும்பை: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கெய்க்வாட் (81).  கொரோனா காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் தாராவியின் எம்எல்ஏ.வாக இருந்தவர். இவர் 1985 முதல் 2004ம் ஆண்டு வரையில் தாராவியில் இருந்து எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் சமூக நீதி துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர்.2004ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையும், 2009ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டுவரையிலும் மும்பை தென் மத்திய லோக்சபை தொகுதி எம்.பி.யாக இருந்தவர். 2017ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை ஏக்நாத் கெய்க்வாட் மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் வர்ஷா கெய்வாட் இப்போது மகாராஷ்டிரா மாநில பள்ளி கல்வி அமைச்சராக இருக்கிறார். வர்ஷா 4வது முறையாக எம்எல்ஏ.வாக  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கெய்க்வாட் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவுக்கு பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Eknath Gaekwad ,Corona ,Mumbai ,Breach ,Candy Hospital ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...