டெல்லி: லடாக்கில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா - சீனா ஒருமித்த முடிவு எடுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் அமைதி திரும்புவதை உறுதிப்படுத்தும் வரை அஜித் தோவல் - வாங் யி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.