சென்னை: சென்னையில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகள் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில் மாநகராட்சி ஆணையரும் பங்கேற்றுள்ளார்.