×

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கலெக்டர்கள் நாளை மரியாதை: பொதுமக்கள் பங்கேற்க தடை; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஜூலை 7ம் தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா சென்னையில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசன் உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட உள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், சென்னை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி நாளை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவரது படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர்தூவி மரியாதை செலுத்துவார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Tags : Birthday Collectors ,Twin Hills Srinivasan ,Twin Hills Srinivasan Birthday Collectors Tomorrow Courtesy of: Prohibition of Public Participation ,Announcement ,State ,Tamil Nadu , Twin Mountain Srinivasan, Birthday, Collectors, Tomorrow Honors, Public, Prohibition, Government of Tamil Nadu
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...