×

வேப்பம்பட்டு ஊராட்சி திட்ட பணிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் 25.வேப்பம்பட்டு ஊராட்சியில் நடந்து வரும் திட்ட பணிகளை ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 25.வேப்பம்பட்டு ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி கட்டுதல், சாலை பணிகள், சிறு பாலம் அமைத்தல் உட்பட பல்வேறு அரசு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஊராட்சியின் திட்ட பணிகளை நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் இராஜேஸ்வரி சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் கிருபாவதி தியாகராஜன், வட்டார வளச்சி அலுவலர்கள் ரவி, பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் சக்தி வினாயகமூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Inspection , Neeppampattu, Panchayat projects, study
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...