×

விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்வது எப்படி என தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்: கேரள அமைச்சர் பாராட்டு

பாலக்காடு: விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்வது எப்படி என தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழர்களை பாராட்டி பேசியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வள அமைச்சராக இருந்து வருபவர் கிருஷ்ணன் குட்டி. இவர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட கருகமணி பகுதியில் புதிய நீர்ப்பாசன இயந்திரத்தின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஞ்ஞானப்பூர்வமாக விவசாயம் செய்ய வேண்டும்.  

விஞ்ஞானபூர்வமாக வேளாண்மை செய்வது எப்படி என தமிழர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழர்களை பாராட்டும் வகையில் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விஞ்ஞான விவசாய முறைகள் அவசியம். மலையாளர்களின் விவசாய முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார். கேரள விவசாயிகள் வருமானத்தை ஈட்டும் வகையில் வேளாண்மையை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், விவசாய முறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.


Tags : Minister Agriculture Minister ,Tamils ,Kerala , Minister Krishnan Kutty,Agriculture, Tamils, Kerala
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்