சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை ஆணையர் பேட்டியளித்தார். சென்னையில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினார். மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார். விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.