சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா ஒழிப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார். நோய் அளிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்தார்.