×

தண்ணீர் இல்லாத பாழுங்கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் எட்டி. இவரது மனைவி சந்திரா (60). கடந்த 30ம் தேதி சந்திரா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை, உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை. இந்நிலையில்  கொல்லமேடு சுடுகாடு அருகே மலைப்பகுதியில் தண்ணீரே இல்லாத  பாழடைந்த விவசாய கிணற்றில், நேற்று காலை பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மாயமான மூதாட்டி சந்திரா என தெரிந்தது. இதையடுத்து சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.



Tags : Water, vandalism, grandfather's corpse
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...