×

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா: ஒரே நாளில் 123 பேர் பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக, நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. காஞ்சிபுரம் நகராட்சியில் 64 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 2272 பேருக்கு கொரோனா உறுதியானது. ஆனால், நேற்று ஒரே நாளில், மாவட்டம் முழுவதும் 123 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டது இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2395 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

நேற்று  மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையொட்டி, காஞ்சிபுரம் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சியில் 64, ஒன்றியத்தில் 8, பெரும்புதூரில் 11, வாலாஜாபாத்தில் 12, குன்றத்தூரில் 6, அய்யப்பன்தாங்கலில் 5, உத்திரமேரூர், மாங்காட்டில் தலா 3, சின்னகுப்பத்தில் 2, கொளப்பாக்கம், படப்பை, ஆதனூர், தண்டலம், ஒரகடம், கோவூர், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 123 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 26,  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2395 என உயர்ந்துள்ளது. இதில் 1329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிக்கும் தம்பதி மற்றும் அவர்களது 16 வயது மகளுக்கு நேற்று கொரோனா உறுதியானது. அதேபோல் பேரூராட்சியில் நேற்று மட்டும் 8 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், திருக்கழுக்குன்றம் வன்னியர் தெருவைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையொட்டி, மாவட்டத்தில் மொத்தம் 6355 ஆக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தாம்பரம், பம்மல், மறைமலைநகர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் 5 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.



Tags : Kancheepuram ,Corona , Kanchipuram District, Corona
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...