திருவள்ளூர்: ஆவடி வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.சாலிவாகனனை வேந்தர் டாக்டர் வேல் ஆர்.ரங்கராஜன் அறிவித்ததையொட்டி முறைபடி பதவி ஏற்றுக்கொண்டார்.
பேராசிரியர் எஸ்.சாலிவாகனன் சுமார் 40 ஆண்டுகள் கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறை மற்றும் மேலான்மை துறையில் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர். 116 ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்பித்து பத்திரிக்கையில் இடம் பெறச்செய்துள்ளார்.
மேலும் பொறியியல் மாணக்கர்களுக்காக 65 பாடபுத்ககங்களை எழுதியதை சர்வதேச பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இவரது டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் புத்ககம் உலகின் அதிக மக்கள் பேசக்கூடிய சீனாவின் மாண்டரின் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது..