சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் புதிய கல்லூரிகள் தொடங்கவும், புதிய பாடப்பிரிவுகளை தொடங்கவும் நாடு முழுவதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் நீடித்து வரும் நிலையில், புதிய முடிவு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு எடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் நாடு முழுவதும் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்குவதில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
அதனால் இந்த கல்வி ஆண்டில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது, புதிய பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி வழங்காது. இதனால் தமிழகத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்து காத்துள்ளவர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.