தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவ வழக்கை போலீஸ் நேர்மையாக விசாரணை செய்து வருகிறது என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்ப வேண்டாம். உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.