×

கொரோனாவால் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தும் பத்திரிகையாளர்கள்!!

சென்னை: கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் கடந்த மாதம் 27ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊடகத்துறையினர் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மறைந்த வேல்முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பாக இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணை செயலாளர் பாரதிகண்ணன், அந்த தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக இருக்கக்கூடிய மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சங்க தலைவர்கள், அதேபோல் உடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பேசிய பாரதிகண்ணன், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமின்றி செய்தியாளர்கள் உடன் வருபவர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். ஒளிப்பதிவாளர் துறையில் வேல்முருகன் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக செய்தித்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

வேல்முருகனின் குடும்பத்திற்கு பத்திரிகையாளர்கள் மன்றம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்த மன்றம் தொடர்ச்சியாக செய்யும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மேலும் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் இன்று மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்டது. அரசு சார்பாகவும் வேல்முருகன் குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Velmurugan ,Journalists ,Corona , Corona, Cinematographer, Velmurugan, Journalists
× RELATED பொய்யான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை: வேல்முருகன் தாக்கு