×

செங்கல்பட்டில் அதிதீவிரமாக மாறும் கொரோனா.: ஒரே நாளில் 169 பேருக்கு தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனாவின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அம்மாவட்டத்தின் ஒட்டு மொத்தமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,308-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத எண்ணிக்கை 106 ஆக உள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை 2,919-ஆகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,113-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chengalpattu , Coronavirus ,Chengalpattu, 169 people,one day
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்