தஞ்சை: போலீஸ் நண்பர்கள் அமைப்புக்கு தடை விதிக்கக்கோரி தஞ்சாவூரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி முழக்கமிட்டு வருகின்றனர். லாக் அப் மரணங்களை தடுக்க போலீஸ் நண்பர்கள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.