சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளதாக ஐ.ஜி.சங்கர் பேட்டியளித்தார். தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுணேஷ், பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.