நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த வேல்முருகன், சுபாஷ், சதீஸ் முத்து, சரவணன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜயநாராயணம் என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.