திருவள்ளூர்: சென்னை, முகப்பேர் கிழக்கில் அமைத்துள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தேசிய மருத்துவர்கள் தினத்தைக் கொண்டாடினர். மாணவர்கள் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் தங்களது வாழ்க்கையைப் பணயம் வைத்து மருத்துவர்களாக பணியாற்றும் மாணவர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்க முடிவு எடுத்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பலர் தங்களின் பெற்றோர் மருத்துவர்களுக்கு பூச்செண்டை வழங்கினர். இதன் மூலம் மாணவர்கள் இந்த சிறப்பு நாளைக் குறித்து, மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்த போராட்டங்களை மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி மற்றும் மரியாதையை வெளிப்படுத்தினர்.