×

கொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!!

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்படும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் JEE மேம்பட்ட தேர்வு வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, தரமான கல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்திய மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவிட்டது. 2020-21 கல்வியாண்டில், மருத்துவப்படிப்பு (MBBS) மாணவர் சேர்க்கைகான நீட் தகுதித் தேர்வை ஜூலை 26 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால், கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டப்படி இந்தத் தேர்வை நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

இதையடுத்து, இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா, அப்படி ரத்து செய்யப்பட்டால் எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் நடத்தப்படும் என்பன போன்ற சநதேகங்கள் விண்ணப்பதாரர்கள், அவர்களின் பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்திருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் தேர்வை ஒத்திவைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 13-ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramesh Bokri , Corona, NEET Examination, Adjournment, by Union Minister Ramesh Bokri
× RELATED சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு...