×

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றுக்கு எதிராக போராடி வரும் கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் 4 பேர் கைது!!!

தஞ்சை:  ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றுக்கு எதிராக போராடி வரும் கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  கடந்த பல வருடங்களாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல்,கேஸ் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால் அரசு இதனை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ராட்சத இயந்திரங்கள் கொண்டு, கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பணியில் ஈடுபட்டுள்ளது.  அப்போது மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுவரை அங்கு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்தும் மக்கள், பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் பணியில் ஈடுபட்டால், ஏற்கனவே தண்ணீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் இதுபோன்ற பராமரிப்பு பணியின் போது பல விதமான ரசாயனங்கள் உள்ளே செலுத்தப்படுகின்றது. இதனால் குடிநீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசியால் ஒட்டுமொத்த மக்களும் அழியும் நிலையும் உருவாகியுள்ளது, என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனமானது எண்ணெய் கிணற்றின் பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்,  தகவலறிந்த கதிராமங்கல போராட்டக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, காவல் துறையினரால் கதிராமங்கலத்தை சேர்ந்த ராஜு, ராஜாராமன், கஸ்தூரி மற்றும் தேவேந்திரன் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : ONGC KADIRAMANGALAM STORY GROUP ,OIL ONGC , ONGC KADIRAMANGALAM GROUP ARRESTED FOR OIL
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...