×

251 பெட்டிகளுடன் கூடிய சுமார் 3 கி.மீ நீளமுள்ள ரயிலை இயக்கிய இந்திய ரயில்வே

நாக்பூர்: நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்லப் பயன்படும் சரக்குப் பெட்டிகள் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கி.மீ நீளமுள்ள நீண்ட ரயிலை உருவாக்கினர்.

இந்திய ரயில்வேயில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை (வேகன்) ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரே ரயிலாக இணைத்து இயக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் ரயிலை அனகோண்டா ரயில் என அழைப்பார்கள். காரணம், ஒரே நேரத்தில் ஓரிடத்தில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகள் சேர்க்கப்படுவது அரிதாகும். இதற்கு முன் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் இம்மாதிரி 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை இணைத்து அனகோண்டா ரயிலாக இயக்கியுள்ளனர்.

4 ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலிச் சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சேஷ்நாக் எனப் பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை இயக்கித் தென்கிழக்கு மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

 



Tags : Indian Railways , Railway, Indian Railways
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்