×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 291 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,098ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று உறுதியான 291 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அறிகுறிகள் இருந்து தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டவர்கள் ஆவர். நேற்றுவரை 96 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 3,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,984 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : district ,Chengalpattu , Chengalpattu , Corona, cases, Death toll
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!