×

அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு அளிக்கப்டும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தபின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீவிரமாக தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் வாயு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜன் டேங்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Tags : Minister Vijayabaskar , Government Hospital, Oxygen, Minister Vijayabaskar
× RELATED சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...