×

மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்: டிரைவர் பலி

பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே பள்ளிக்குப்பம் என்ற பகுதியில் பூந்தமல்லியில் இருந்து வந்த லாரி சாலையின் வலது புறம் திரும்பியது. அப்போது,  பின்னால் ஜல்லி ஏற்றி வந்த லாரியும் மெதுவாக  வந்து கொண்டிருந்தது. ஜல்லி லாரியின் பின்னால்,  சென்னீர்குப்பத்தில் இருந்து தண்ணீர் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக  தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற  ஜல்லி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. அந்த லாரி முன்னால் வளைவில் திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. அடுத்தடுத்து, 3 லாரிகள் மோதிக்கொண்டது.

அதில், தண்ணீர் லாரியை ஓட்டி வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய டான் போஸ்கோ (42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அடுத்தடுத்து மோதியதில் சேதமடைந்த 3 லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி டிரைவரின் உடலை கீழ்ப்பாக்
கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : valley ,Madurai , Alcohol, trucks, collision
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...